அக்.,29,2013. 'பணமும் இவ்வுலகப்பொருட்களும் நம் வாழ்வின் மையமாக மாறும்போது, அவை நம்மை
தங்கள் வசம் இழுப்பதோடு நம்மை அடிமையாகவும் மாற்றிவிடுகின்றன' என தன் டுவிட்டர் பக்கத்தில்
இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நுகர்வுக்கலாச்சாரத்திற்கு
நாம் ஒருநாளும் அடிமையாகிவிடக்கூடாது என பலவேளைகளில் தன்மறையுரைகளிலும், டுவிட்டர் செய்திகளிலும்
அறிவுறுத்தி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.