2013-10-29 16:11:08

தண்ணீர் சிக்கனம் அவசியம்! : குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி


அக்.,29,2013. உலக மக்கள்தொகையில், 17 விழுக்காடாக உள்ள இந்தியாவில் உலக அளவோடு ஒப்பிடும்போது, 4 விழுக்காடு நீர்வளமே உள்ளதால், தண்ணீர் பயன்பாட்டை இந்தியர்கள், சிக்கனமாக, திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.
மக்கள்தொகை அதிகரிப்பு, நகர்புறமாதல் போன்ற காரணங்களால் நீர்வளத் தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய இந்தியக் குடியரசுத்தலைவர், நீர்வளத்தைப் பயன்படுத்துவதில் ஒவ்வோர் இந்தியரும் பொறுப்புடன் செயல்படவேண்டியத் தேவையை வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : Dinamalar








All the contents on this site are copyrighted ©.