வத்திக்கான் தொலைக்காட்சி மையப்பணியாளர்களுக்குத் திருத்தந்தையின் உரை
அக்.,28,2013. தனியாக அல்ல, மாறாக ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் நாம் மனித குலமனைத்திற்கும்
சேவையாற்றமுடியும் என, இத்திங்களன்று திருப்பீடத்தில் வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின்
பணியாளர்களைச் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தொலைக்காட்சி
மையம் 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 30 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, அம்மையத்தின் பனீயாளர்களை
சந்தித்து உரைவழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்து பணியாற்றும்போது அது
பலத்தை வழங்குவதாகவும், ஒன்றிப்பின் சாட்சியமாகவும் விளங்கும் என்றார். கடந்த 30 ஆண்டுகளில்
வத்திக்கான் தொலைக்காட்சி மையம் ஆற்றியுள்ள சிறப்புச்சேவைகளைப் பாராட்டிய திருத்தந்தை
பிரான்சிஸ், ஒன்றிணைந்து உழைப்பதன் மூலம் சமூகத்தொடர்புத்துறையை மிகுந்த ஆற்றல் வாய்ந்ததாக
மாற்றமுடியும் எனவும் கூறினார்.