வியட்நாமில் இரு கத்தோலிக்க மனித உரிமை நடவடிக்கையாளர்களுக்கு 7 மாத சிறைத்தண்டனை
அக்.,26,2013. வியட்நாம் நாட்டில் மனித உரிமைகளுக்காகவும் மதசுதந்திரத்திற்காகவும் போராடிய
இருவருக்கு 7 மற்றும் 6 மாத சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
Ngo Van Khoi, Nguyen Van Hai என்ற மனித உரிமை நடவடிக்கையாளர்கள் இருவரின் விடுதலைக்காக
அந்நாட்டுத் திருஅவைத் தலைவர்கள் விடுத்த அழைப்புக்கு செவிசாய்க்க மறுத்துள்ள வியட்நாமின்
வடமத்தியப்பகுதி Vinh அதிகாரிகள், பொதுஒழுங்கிற்கு ஊறுவிளைத்ததாகக் குற்றஞ்சாட்டி இத்தீர்ப்பை
வழங்கியுள்ளனர். இவ்விரு கத்தோலிக்கர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல்,
3 மணிநேரத்தில் இரகசியவிசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது Vinh நீதிமன்றம். மனித
உரிமை நடவடிக்கையாளர்கள் Ngo Van Khoi, Nguyen Van Hai ஆகியோரின் விடுதலைக்காக வியட்நாம்
கத்தோலிக்கர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.