2013-10-26 16:42:24

உருகுவாய் இயேசுசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள மாணவர்களுடன் திருத்தந்தை


அக்.,26,2013. உருகுவாய் நாட்டோடு தான் கொண்டுள்ள உறவை நினைவுகூரும்போது, இச்சந்திப்பு வாக்குறுதி மற்றும் நம்பிக்கையின் ஓர் அடையாளமாக இருப்பதாக உருகுவாயிலிருந்து வந்திருந்த இயேசுசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களை திருப்பீடத்தில் சந்தித்த நிகழ்ச்சியின்போது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உருகுவாய் இயேசபை கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகளாக வந்திருந்த ஏறத்தாழ முப்பது பேரையும் அவர்களுடன் வந்திருந்த சிறார்களையும் இச்சனிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிர்ரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டுக்குப் பின்னர் தான் உருகுவாய் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கு இருக்கும் வாய்ப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் திருப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால், அது சிலே மற்றும் உருகுவாய் நாடுகளுக்கான திருப்பயணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்ற உறுதிமொழியையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.