அக்.,21,2013. சேலம் மாவட்டத்தில் இருந்து, பிழைப்பு தேடி, ஆந்திரா மற்றும் கேரளாவுக்குச்
செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை, பாதுகாப்புக்காகவும், பணத்துக்காகவும் மளிகைக்
கடை, உணவு விடுதி உள்ளிட்ட இடங்களில், அடமானம் வைப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளன
செய்தி நிறுவனங்கள். சேலம் மாவட்டம், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, ஆத்தூர் உட்பட,
பல இடங்களில் இருந்து, பிழைப்பு தேடி, வெளியூர் செல்லும் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை,
பாதுகாப்பு கருதியும், பணத்துக்காகவும், மளிகைக் கடை, உணவு விடுதி, ஜவுளிக்கடை உட்பட,
பல இடங்களில், குறைந்த அளவு பணத்தை பெற்றுக்கொண்டு, ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டுவரை அடமானம்
வைத்துவிட்டு, வெளிமாநிலத்துக்குச் செல்வதாகவும், ஊர் திரும்பிய பின், குழந்தையை மீட்டு,
சில மாதம் வரை, குழந்தைகளை தங்களுடன் வைத்துக்கொண்டு, மீண்டும், குழந்தைகளை அடகு வைத்துவிட்டு,
வெளிமாநிலத்துக்கு சென்று விடுவதால், அடமானம் வைக்கப்படும் குழந்தைகளின் கல்வி மற்றும்
எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது என்றும் கூறுகின்றனபிறர்நலஅமைப்புகள்.