ஆப்பிரிக்க யானைகள் 10 ஆண்டுகளில் அழிந்துவிடலாம் - எச்சரிக்கை
அக்.,21,2013. சட்டவிரோத தந்த வேட்டையால் ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள்
30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்று விலங்கு பாதுகாப்புக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தந்தத்துக்காக
பல்லாயிரக்கணக்கான யானைகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு இது அதிகம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக சீனாவில் யானைத்தந்தத்துக்கான
தேவை அதிகமாகக் காணப்படுகிறது