2013-10-19 16:02:48

புனித தாமஸ் மூர் அவர்களின் புனித இடங்களைத் தரிசித்துவரும் இத்தாலிய மக்களவை குழுவினருக்குத் திருத்தந்தை வாழ்த்து


அக்.19,2013 புனித தாமஸ் மூர் அவர்களின் புனித இடங்களைத் தரிசித்துவரும் இத்தாலிய மக்களவையின் ஒரு குழுவினருக்குத் தனது வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அரசை ஆள்கிறவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாவலராகிய புனித தாமஸ் மூர் அவர்களின் புனித இடங்களைத் தரிசிப்பதற்கு இவர்கள் எடுத்துள்ள முயற்சியை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அரசியல்வாதிகளின் பொதுநலப் பணியில் பிறரன்பு முதன்மை இடம் வகிக்கவேண்டுமென்று இப்புனிதரிடம் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.
இச்செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலகத்தின் நேரடிப்பொதுச்செயலர் பேராயர் ஆஞ்சலோ பெச்சு அனுப்பியுள்ளார்.
2000மாம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அரசை ஆள்கிறவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாவலராக புனித தாமஸ் மூர் அவர்களை அறிவித்தார்.
இத்தாலிய மக்களவையின் இந்தக் குழு, இஞ்ஞாயிறன்று தங்களது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.