வெளிமண்டலத்தில் காற்று மாசடைவது, சுற்றுச்சூழல் தொடர்பான புற்றுநோய் இறப்புக்களுக்கு
முக்கிய காரணம், ஐ.நா.வல்லுனர்கள்
அக்.18,2013. வெளிமண்டலத்தில் காற்று மாசடைவது, சுற்றுச்சூழல் தொடர்பான புற்றுநோய் இறப்புக்களுக்கு
முக்கிய காரணம் என, உலக நலவாழ்வு நிறுவனத்தின் புற்றுநோய்ப் பிரிவு எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழலில்
நிலவும் தூய்மையற்ற காற்றால், சுவாச நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களின் தாக்கம்
ஏற்கனவே அதிகரித்துவரும்வேளை, உலகின் சில பகுதிகளில், குறிப்பாக, மக்கள்தொகை அதிகமாவுள்ள
தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் அண்மை ஆண்டுகளில் தூய்மையற்ற காற்றால் சுற்றுச்சூழல்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, IARC என்ற புற்றுநோய்ப் பிரிவு நடத்திய ஆய்வின் முடிவு
கூறுகிறது. தூய்மையற்ற காற்றால் ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயால் 2010ம் ஆண்டில் 2
இலட்சத்து 23 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என, அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.