அலகாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் Raphy Manjaly
அக்.17,2013. வாரணாசி மறைமாவட்டத்தின் ஆயராக கடந்த ஆறு ஆண்டுகள் பணியாற்றிவந்த ஆயர்
Raphy Manjaly அவர்களை, அலகாபாத் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், இவ்வியாழனன்று நியமித்துள்ளார். 1958ம் ஆண்டு பிறந்த ஆயர் Raphy Manjaly
அவர்கள், 1983ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 2007ம் ஆண்டு வாரணாசி ஆயராகவும் அருள்பொழிவு
செய்யப்பட்டவர். அலகாபாத் தலைமைப் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆயர் Isidore Fernandes
அவர்கள், 2013ம் ஆண்டு சனவரி மாதம் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கடந்த
பத்து மாதங்கள் அலகாபாத் மறைமாவட்டத்தை அருள் பணியாளர் Ignatius Menezes அவர்கள் நிர்வகித்து
வந்தார்.