2013-10-15 16:29:32

திருத்தந்தை பிரான்சிஸ், IOM நிறுவன இயக்குனர் சந்திப்பு


அக்.15,2013. குடியேற்றதாரர் மற்றும் சமூகத்தில் நலிந்த மக்களுக்கு ஆதரவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்துவரும் உறுதியான அழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார், IOM என்ற அனைத்துலக குடியேற்றதாரர் நிறுவனப் பொது இயக்குனர் William Lacy Swing.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த IOM இயக்குனர் Swing அவர்கள், லாம்பெதுசா தீவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உள்ளார் எனவும், அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இத்தீவுக்குச் சென்றுள்ளார் எனவும் பாராட்டிப் பேசினார்.
கடந்த இரு வாரங்களில் லாம்பெதுசா தீவுக் கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கான குடியேற்றதாரர் இறந்துள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசிய Swing அவர்கள், தானும் இத்தீவுக்கு நேரிடையாகச் சென்று நிலைமையை அறிந்துவர இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.