கர்தினால் பெர்த்தோனே அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நன்றிச் செய்தி
அக்.15,2013. இச்செவ்வாயன்று திருப்பீடச் செயலகப் பணியை நிறைவு செய்த கர்தினால் தர்ச்சீசியோ
பெர்த்தோனே அவர்களுக்கு நன்றி தெரிவித்து செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். 2006ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியன்று திருப்பீடச் செயலராகப் பணியைத்
தொடங்கிய கர்தினால் பெர்த்தோனே அவர்கள், தாராள உள்ளத்தோடும், சேவை உணர்வோடும் பணியாற்றியுள்ளார்
எனப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியை நிறைவுசெய்யும் கடைசி நாள்வரை
தன்னோடு மிகுந்த ஒத்துழைப்புடன் அவர் செயலாற்றியதையும் குறிப்பிட்டுள்ளார். அன்புமிக்க
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் அச்செய்தியில்
கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுளைக் கொண்டிருப்பவர்களுக்கு எதுவுமே குறைவுபடாது
என்பதை இன்று நாம் விழாக் காணும் புனித அவிலா தெரேசாள் கூறுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ள
திருத்தந்தை பிரான்சிஸ், புனித தொன்போஸ்கோ மற்றும் சலேசிய உணர்வுகளோடு கர்தினால் பெர்த்தோனே
அவர்கள் வாழ்வதையும் பாராட்டியுள்ளார்.