அக்.11,2013. முத்திப்பேறுபெற்ற Foligno Angela அவர்களை, கத்தோலிக்கத் திருஅவையின் புனிதர்
பட்டியலில் இணைத்து அவர் பெயரிலான திருவழிபாட்டை உலகளாவிய திருஅவையும் கொண்டாடுவதற்கு
அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியின் Folignoல் 1309ம் ஆண்டில்
இறந்த முத்திப்பேறுபெற்ற Angela, புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையைச் சேர்ந்தவர். மேலும்,
வணக்கத்துக்குரிய மரிய அசுந்தா கத்ரீனா மார்க்கெத்தியின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை
ஒன்றையும் ஏற்றுள்ளார் திருத்தந்தை. இன்னும், வணக்கத்துக்குரிய இத்தாலியின் அமாத்தோ
ரொன்கோனி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹரிகூரில் 1840ம் ஆண்டில் பிறந்து லிஸ்பனில்
இறந்த இறையடியார் மேரி ஜெய்ன் வில்சன், இன்னும், இறையடியார்கள் இத்தாலியின் பேராயர் ஆல்பெர்த்தோ
தெல் கொரோனா, மரிய எலெயோனோரா ஜோர்ஜி, அத்தில்யோ லூச்சானோ ஜொர்தானி, கானடாவின் மரியா எலிசபெத்
ஆகியோரின் வீரத்துவமான வாழ்வு முறைகள் குறித்த விபரங்களையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்