சிலுவை என்ற மறைபொருளை செபத்தின் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும் - திருத்தந்தையின்
Twitterசெய்தி
அக்.10,2013. அன்பின் பேருண்மையாக விளங்கும் சிலுவை என்ற மறைபொருளை நாம் செபத்தின் வழியாக
மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எனவே, சிலுவைக்கு முன், முழந்தாள்படியிட்டு, கண்ணீருடன்
செபிப்போம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வழங்கிய Twitter செய்தியாக
அமைந்தது. ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், அரேபியம் ஆகிய மொழிகள் உட்பட, வழக்கமான
ஒன்பது மொழிகளில் இச்செய்தி வெளியானது. இதற்கிடையே, அரசியல் பிரச்சனைகளுக்குத் தகுந்த
முறையில் தீர்வு காணாமல், மனிதாபிமான தீர்வுகள் பயன்தராது என்ற Twitter செய்தியை பேராயர்
சில்வானோ தொமாசி அவர்களின் சார்பில், திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டது.