2013-10-10 16:05:45

ஆசிய செய்தி நிறுவனத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


அக்.10,2013. கிறிஸ்துவின் மீட்புச்செய்தி அனைவரையும் சென்றடைவது, தொடர்புத் துறையில் பணியாற்றும் உங்கள் அனைவர் முன்னிலையில் உள்ள ஒரு சவால் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
PIME என்றழைக்கப்படும் பாப்பிறை மறைபரப்புக் கழகத்தின் ஒரு முயற்சியாக துவக்கப்பட்ட கத்தோலிக்க செய்தி நிறுவனமான ஆசிய செய்தி நிறுவனம், தன் பத்தாண்டு பணி நிறைவை இப்புதனன்று உரோம் நகரில் கொண்டாடியபோது, அவர்களுக்குத் திருத்தந்தை வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பினார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள் அனுப்பியிருந்த இச்செய்தியில், ஆசிய செய்தி நிறுவனம் விரைவில் இஸ்பானிய மொழியிலும் தன் முயற்சிகளைத் துவங்கவிருப்பதற்கு திருத்தந்தை தன் தனிப்பட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
உரோம் நகர் உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் "பத்தாண்டுகள் ஆசியாவில், பத்தாண்டுகள் எமது வரலாறு" என்ற தலைப்பில் ஆசிய செய்தி நிறுவனம் இப்புதனன்று ஒரு கருத்தரங்கை நடத்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.