2013-10-09 16:04:46

பெண்களை மதிக்கும் பாடங்களை சொல்லித் தரவேண்டிய முதல் கடமை பெற்றோரைச் சாரும் - மும்பை ஆயர் Savio Fernandes


அக்.09,2013. மனிதர்களை, குறிப்பாக, பெண்களை மதிக்கும் பாடங்களை குழந்தைப் பருவம் முதல் சொல்லித் தரவேண்டிய முதல் கடமை பெற்றோரைச் சாரும் என்று மும்பை நகர துணை ஆயர் Savio Fernandes அவர்கள் கூறினார்.
அக்டோபர் 11, வருகிற வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் பெண் குழந்தை அகில உலக நாளையொட்டி, மும்பை உயர் மறைமாவட்டம் விடுத்துள்ள ஓர் விண்ணப்பத்தில் ஆயர் Fernandes அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்பட்ட மரியன்னையின் பிறந்த நாளையொட்டி, மும்பை உயர் மறைமாவட்டம், பெண் குழந்தை நாளையும் இணைத்துக் கொண்டாடியது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Fernandes அவர்கள், பெண்கள் மட்டில் காட்டப்பட வேண்டிய மாண்பு, குடும்பங்களில் துவங்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மும்பை உயர் மறைமாவட்டத்தைப் பொருத்தவரை, பள்ளிகள், பங்குத்தளங்கள், ஞாயிறு திருப்பலிகள் ஆகிய அனைத்து வழிகளிலும் பெண்கள் மாண்பை வலியுறுத்தும் கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன என்றும் ஆயர் Fernandes அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.