திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் அன்பு
அக்.08,2013. கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் அன்பு. தீமையினால் ஏற்படும் காலியிடங்களை அன்பு
மட்டுமே நிறைக்கும் என்று இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில்
எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வில் அன்பின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கு அமைதி இன்றியமையாதது
என்பதை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்று, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது
டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளது.