திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்களின் குழு, வரும் டிசம்பர் மாதம் மீண்டும்
கூடும் - திருப்பீடப் பத்திரிகை அலுவலகம்
அக்.04,2013. திருஅவையின் நிர்வாக விவகாரங்களில் தனக்கு ஆலோசனை வழங்கும் வண்ணம் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட 8 பேர் கொண்ட கர்தினால்களின் குழு, வரும் டிசம்பர்
மாதம் 3ம் தேதி முதல், 5ம் தேதி முடிய மீண்டும் கூடும் என்று திருப்பீடப் பத்திரிகை அலுவலகம்
தெரிவித்துள்ளது. உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால்களின்
குழு, இம்மாதத் துவக்கத்தில் முதன்முறையாக வத்திக்கானில் கூடியதுபோல, வருகிற டிசம்பர்
மாதமும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய 8 பேர் கொண்ட இந்த ஆலோசகர்கள் குழுவில், மும்பை பேராயர்
கர்தினால் Oswald Gracias அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.