ஐ.நா. : சிரியாவில் 1 கோடிபேருக்கு உணவு உதவிகள் தேவைப்படும்
அக்.04,2013. சிரியாவில் இடம்பெறும் மோதல்களால், ஒரு கோடி மக்களுக்கு உணவு உதவிகள் தேவைப்படுவதாக
ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது. மோதல்கள் இப்படியேத் தொடர்ந்தால், வரும் ஆண்டு சனவரியில்,
சிரியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிபேருக்கு போதிய உணவு இருக்காது என்ற கவலையை வெளியிடும்
ஐ.நா. நிறுவனம், சிரியாவில் ஒவ்வொரு 15 வினாடிகளுக்கும் ஒருவர் அகதியாவதாகவும் தெரிவிக்கிறது.
ஏற்கனவே 20 இலட்சம் அகதிகளுக்கு உதவிகளை வழங்கிவரும் ஐ.நா. அமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள
அறிக்கையில், உணவை நாட்டின் உள்பகுதிக்கு எடுத்துச்செல்ல போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டால்,
மேலும் 20 இலட்சம்பேரைக் காப்பாற்றமுடியும் எனவும் தெரிவிக்கிறது.