2013-10-03 16:18:06

வருகிற ஞாயிறன்று அயர்லாந்தில் "உயிரை மதிக்கும் ஞாயிறு"


அக்.03,2013. "உயிரை மதிக்கும் ஞாயிறு" என்ற கருத்துடன் அக்டோபர் 6ம் தேதி, வருகிற ஞாயிறன்று அயர்லாந்தில் உள்ள அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டத்தின் இறுதியில் வெளியான ஓர் அறிக்கையில், "வாழ்வைப் பேணுவோம்: அது தகுந்த ஒரு முயற்சியே" என்ற மையக் கருத்துடன் வருகிற ஞாயிறு கொண்டாடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கருவில் உள்ள குழந்தைகள், வயது முதிர்ந்தோர், மற்றும் தற்கொலை எண்ணங்களால் துன்புறுவோர் ஆகியோரைப் பேணும் ஒரு முயற்சியாக இந்த ஞாயிறு கொண்டாடப்படும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பு, சமுதாய நீதிக்கென பணியாற்றும் கத்தோலிக்கக் குழுக்கள், வட அயர்லாந்தில் அமைதி முயற்சிகள் என்ற தலைப்புக்களின் கீழ் ஆயர் பேரவை மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு திட்டங்கள் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.