2013-10-03 16:17:58

நைரோபியில் நடைபெற்ற வன்முறைக் கொலைகளில் இறந்தோருக்கு பல்சமய செப வழிபாடு


அக்.03,2013. செப்டம்பர் 21ம் தேதியன்று நைரோபியில் Westgate என்ற வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக் கொலைகளைக் கண்டித்தும், இறந்தோரின் ஆன்மா சாந்திக்கென வேண்டியும் அக்டோபர் 1, இச்செவ்வாயன்று பல்சமய செப வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
Kenyatta பன்னாட்டு கருத்தரங்கு மையத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், கென்யா நாட்டு கர்தினால் John Njue அவர்கள் உட்பட பல்சமயத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் இந்த வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட அனைவருமே வன்மையான கண்டனத்திற்கு உரியவர்கள் என்று கென்யா நாட்டு இஸ்லாமிய உயர்மட்டக் குழவின் செயலர் Adan Wachu அவர்கள் கூறினார்.
இவ்வன்முரையினால் உருவான மனக் காயங்கள் ஆறவும், நாட்டில் ஒப்புரவும், ஒற்றுமையும் வளரவும் இச்செப வழிபாட்டில் வேண்டுதல்கள் எழுப்பப்பட்டன.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.