2013-10-01 16:53:50

அக்.4, அனைத்துலக சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை


அக்.,01,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டு வாஷிங்டனில் அனைத்துலக சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை அக்டோபர் 4, வருகிற வெள்ளியன்று நடைபெறும்.
வாஷிங்டன் தேசிய அமலமரி பசிலிக்காவில், வெள்ளி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தச் சிறார் ஒருமணி நேரத் திருநற்கருணை ஆராதனை, EWTN தொலைக்காட்சியில் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
ஆயிரக்கணக்கானப் பள்ளிச்சிறார் கலந்துகொள்ளும் இத்திருவழிபாட்டை வாஷிங்டன் கர்தினால் Donald Wuerl தொடங்கி வைப்பார். அதேநேரத்தில் உலகெங்கும் பங்கு ஆலயங்கள் மற்றும் சிற்றாலயங்களில் இலட்சக்கணக்கான சிறார் இதே திருவழிபாட்டில் கலந்து கொள்வர்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் உலகின் சிறார் உலகின் குடும்பங்களுக்காகத் திருநற்கருணை முன்னர் செபிப்பார்கள்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.