2013-09-30 17:00:58

திருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் 2014 ஏப்ரல் 27ல் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளனர்


செப்.30,2013. முத்திப்பெற்றதிருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான் பால் அவர்களும் வருகிற ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி, ஞாயிறன்று, திருஅவையில் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று அறிவித்தார்.
2014ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறுக்குப்பின் வரும் முதல் ஞாயிறன்று, அதாவது இறை இரக்கத்தின் ஞாயிறன்று, வத்திக்கானில் இடம்பெறும் திருப்பலிக்கொண்டாட்டத்தின்போது இவ்விருவரும் புனிதர்களாக அறிவிக்கப்படுவர்.
உயிர்ப்புக்குப்பின்வரும் முதல் ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறாகஅறிவித்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் முத்திப்பேறு பெற்றஅறிவிப்பு விழா, 2011ம் ஆண்டு, மே முதல் தேதி, அதே இறை இரக்கத்தின் ஞாயிறன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.