இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக்கூடாது : ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
செப்.30,2013. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத காரணத்தினால்
அங்கு காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப்படக் கூடாது என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
எனும் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக் கோரியுள்ளது. மேலும், இலங்கையில் காமன்வெல்த்
நாடுகளின் தலைவர்கள் அமர்வு நடத்தப்படுவதனை தடைசெய்ய வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கை
மனித உரிமை நிலைமைகள் குறித்து, காமன்வெல்த் நாடுகள் அமைப்பு வெட்கப்படக்கூடிய வகையில்
மௌனம் காத்து வருவதாகவும் அவ்வமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.