2013-09-30 17:19:27

2014ம் ஆண்டின் சமூகத்தொடர்பு நாளுக்கான கருப்பொருள்


செப்.,30,2013. “சமூகத்தொடர்பு சாதனங்கள், உண்மையான கலாச்சாரச் சந்திப்பின் பணியில்” என்ற தலைப்பை 2014ம் ஆண்டின் அனைத்துலக சமூகத்தொடர்பு நாளுக்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கலாச்சாரங்கள் வழியாகவே மற்ற மக்களை மிகவும் அர்த்தமுள்ள வழியில் நாம் சந்திக்கின்றோம் என்பதை இத்தலைப்பு வலியுறுத்துகின்றது.
உலக ஆயர்களின் வேண்டுகோளின்பேரில் பல நாடுகளில் பெந்தெகோஸ்தே விழாவுக்கு முன்வரும் ஞாயிறன்று சமூகத்தொடர்பு நாள் திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றது.
48வது அனைத்துலக சமூகத்தொடர்பு நாள் 2014ம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று சிறப்பிக்கப்படவுள்ளது.
இந்நாளுக்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, 2014ம் ஆண்டு சனவரி 24, புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவன்று வெளியிடப்படும். இப்புனிதர் ஊடகவியலாளரின் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.