சிரியாவில் வேதிய ஆயுதங்கள் குறித்த வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா.தீர்மானம்
செப்.,28,2013. சிரியாவில் வேதிய ஆயுதங்கள் அழிக்கப்படவும், வேதிய ஆயுதக்கிடங்கு ஒப்படைக்கப்படவுமான
தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை ஒரே மனதாக நிறைவேற்றியுள்ளது. சிரியா
விவகாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதன்முறையாக ஐ.நா.பாதுகாப்பு அவையின் 15 உறுப்பு
நாடுகளும் ஒரே மனதாக ஓட்டளித்துள்ளன. இத்தீர்மானத்தின்படி சிரியா தனது வேதிய ஆயுதக்
கிடங்கை ஐ.நா. கண்காணிப்பாளர் பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆயினும், கடந்த ஜூலை 21ம்
தேதி சிரியாவில் நடத்தப்பட்ட வேதிய ஆயுதத் தாக்குதல் தொடர்பாக, சிரியா அரசு மற்றும் சிரியாவின்
புரட்சிக்குழுமீதான எவ்வித நடவடிக்கையையும் இத்தீர்மானம் உள்ளடக்கவில்லை. மேலும்,
வருகிற நவம்பர் பாதியில் அமைதிக் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. இதற்குத் திருப்பீடம்
தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.