2013-09-27 16:04:14

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் கொடையாகிய விசுவாசம் திருஅவை வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது


செப்.,27,2013. நாம், நாமாகவே கிறிஸ்தவர்களாக மாறுவதில்லை. விசுவாசம், அனைத்துக்கும் மேலாக, இறைவனின் கொடை, இது திருஅவையிலும், திருஅவை வழியாகவும் நமக்குக் கொடுக்கப்படுகிறது என்று இவ்வெள்ளியன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis ‏@Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையின் மகத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு விரைவில் அழைக்கப்படுவார் என்று கத்தோலிக்க ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று வத்திக்கானில் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/CWN







All the contents on this site are copyrighted ©.