2013-09-27 16:05:06

உலகிலுள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் முழுமையாகக் களையப்பட வேண்டும், பேராயர் மம்பர்த்தி


செப்.,27,2013. உலகில் அணு ஆயுதப் போரின் ஆபத்தை அகற்றுவதற்கு, உலகிலுள்ள அனைத்து அணு ஆயுதங்களும் ஒழிக்கப்படுவது இன்றியமையாதது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
உலகில் அணு ஆயுதங்களை அகற்றும் விவகாரம் குறித்து ஐ.நா.பொது அவையில் முதல் தடவையாக இவ்வியாழனன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி இவ்வாறு கூறினார்.
அணு ஆயுதப் போர் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளவேளை, இந்த ஆயுதங்களைக் களைவதற்கு நம்பிக்கை நிறைந்த சூழலில் நேர்மையான உரையாடல் அவசியம் என்றும் பேராயர் மம்பர்த்தி கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.