2013-09-26 15:41:14

புனித Thekla துறவு மடத்தில் சிக்கியிருக்கும் அருள் சகோதரிகளையும், ஏழைக் குழந்தைகளையும் காப்பாற்றவேண்டும் - முதுபெரும் தந்தை Ignatius Zakka


செப்.26,2013. தமஸ்கு நகரின் வடக்கே, Maaloula என்ற கிராமத்தில் அமைந்துள்ள புனித Thekla துறவு மடத்தில் சிக்கியிருக்கும் 40 அருள் சகோதரிகளையும், ஆதரவற்ற பல ஏழைக் குழந்தைகளையும் காப்பாற்றவேண்டும் என்று தமஸ்குவில் உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Ignatius Zakka அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
சிரியா அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே நிகழும் வன்மையான தாக்குதல்களால், இந்த மடத்தில் தங்கியிருக்கும் யாரும் வெளியேற முடியாதச் சூழல் உருவாகியிருப்பதாகவும், அங்கு வாழ்வோர் கடந்த இரு வாரங்களாக உணவு பற்றாக் குறையால் அவதியுறுவதாகவும் முதுபெரும் தந்தை Zakka அவர்கள் கூறியுள்ளார்.
புனித Thekla துறவுமடம் மிகப் பழமை வாய்ந்த ஒரு இடம் என்றும், Maaloula கிராமத்தில் அமைந்திருந்த பல பழமையான கோவில்கள் இந்தப் போரினால் சிதைந்துள்ளன என்றும் ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதற்கிடையே, Aleppo நகரைச் சுற்றி உருவாகியுள்ள அழிவுகளைக் குறித்து, அங்குள்ள கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் Jean-Clément Jeanbart அவர்கள் Fides செய்திக்கு புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளார்.
அண்மைய மாதங்களில், Aleppo நகரில் மட்டும், 1400க்கும் அதிகமான தொழிற்சாலைகளும் கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும், நாடு முழுவதிலும் 2000க்கும் அதிகமான பள்ளிகளும், 37 மருத்துவ மனைகளும் சேதமடைந்துள்ளன என்றும் பேராயர் Jeanbart அவர்களின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : ICN / Fides








All the contents on this site are copyrighted ©.