2013-09-25 16:42:10

உலகச் சுற்றுச் சூழல் குறித்து, Christian Aid அமைப்பு வெளியிடவிருக்கும் அறிக்கை


செப்.25,2013. மனித சமுதாயத்தின் செயல்பாடுகளால் உருவாகும் கார்பன் வெளிப்பாட்டின் அளவைக் குறைக்கத் தவறினால், மனிதர்கள் அனைவரும், குறிப்பாக, ஏழை மக்கள் அதிகத் துன்பங்களுக்கு உள்ளாவர் என்று Christian Aid எனப்படும் பிறரன்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகச் சுற்றுச்சூழல் குறித்து, செப்டம்பர் 27, வருகிற வெள்ளிக்கிழமையன்று Christian Aid அமைப்பு வெளியிடவிருக்கும் ஓர் அறிக்கையில், கடந்த 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் இன்னும் ஆபத்தான அளவு மாற்றங்கள் உருவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் இதுவரை நாம் காணாத பூச்சி வகைகள் உருவாகியுள்ளன என்பதையும், இவை, பயிர்களுக்கு விளைவிக்கும் ஆபத்து நம்மைப் பாதிக்கின்றது என்பதையும் ஓர் எடுத்துக்காட்டாக இவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த 6 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் மாற்றங்களால், ஆப்ரிக்கக் கண்டமும், ஆசிய கண்டமும் மிக அதிகப் பாதிப்புக்களைச் சந்தித்து வருகின்றன என்பதையும் இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.