அருணாச்சல் பிரதேச கத்தோலிக்கர் முதன்முறையாக திருமுழுக்கு பெற்ற நாளின் 50வது ஆண்டு
விழா
செப்.25,2013. இந்தியாவின் அருணாச்சல் பிரதேச கத்தோலிக்கர், முதன்முறையாக தாங்கள் திருமுழுக்கு
பெற்ற நாளின் 50வது ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடினர். 1963ம் ஆண்டு ஜூன் மாதம்,
Apatani என்ற பழங்குடியினர் குலத்தைச் சார்ந்த Joseph Tage Moda, William Tage Tatun,
Athanasius Roto Tajo என்ற மூன்று பெரும் திருமுழுக்கு பெற்றதன் 50வது ஆண்டு நிறைவை நினைவுகூரும்
திருப்பலி அண்மையில் Ziro என்ற பங்குத்தளத்தில் கொண்டாடப்பட்டது. 1963ம் ஆண்டு திருமுழுக்கு
பெற்ற இந்த முதல் மூவரும் கலந்துகொண்ட திருப்பலியை Tezpur மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர்
Robert Kerketta அவர்கள் நிறைவேற்றினார். அருணாச்சல் பிரதேசத்தில் வாழும் 9 இலட்சத்திற்கும்
அதிகமான பழங்குடியினர் மத்தியில், அரசு விதித்துவரும் பல்வேறு தடுப்புச் சட்டங்களையும்
மீறி, தற்போது 2 இலட்சத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் திருமுழுக்கு பெற்றுள்ளனர்
என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.