மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், புதிய வளர்ச்சித்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், ஐ.நா.
செப்.,24,2013. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், 2015ம் ஆண்டின் வளர்ச்சித்திட்டத்தில்
நேரிடையாக இணைக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மாற்றுத்திறனாளிகளின்
வாழ்வை முன்னேற்றுவது குறித்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் கொள்கைகள் வகுக்கப்படுவதற்கு
ஆதரவாக ஐ.நா.பொது அவையின் உயர்மட்ட கூட்டத்தில் உலகத் தலைவர்கள் உறுதியளித்துள்ளதை யொட்டி
இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர் ஐ.நா. அதிகாரிகள். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த
அனைத்துலக ஒப்பந்தத்தை அமல்படுத்தாத நாடுகள் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா.
பொது அவைத் தலைவர் John Ashe கேட்டுக்கொண்டார். இதுவரை 134 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை
அமல்படுத்தியுள்ளன.