2013-09-23 16:12:12

புதிய செனட் அவைக்கு Burkina Faso ஆயர்கள் எதிர்ப்பு


செப்.23,2013. புதிய செனட் அவை ஒன்றை உருவாக்கி, அதில் மதப்பிரதிநிதிகளுக்கும் இடமளிக்கும் Burkina Faso அரசுத்தலைவரின் திட்டத்தை தாங்கள் ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மதத்தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை செனட் அவையில் நியமிக்கலாம் என்ற அரசுத்தலைவரின் புதியச் சட்டத்திற்கு தாங்கள் செவிமடுக்க விரும்பவில்லை எனவும், சமூக இணக்க வாழ்வுக்கு நன்னெறி அடிப்படையில் வழிகாட்டியாக இருக்க விழையும் தங்கள் நோக்கத்திற்கு அது தடையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் Burkina Faso ஆயர்கள்.
அரசு நிர்வாகத்தில் பங்குபெறுவது தங்களுக்குரிய பணியல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தேவையெனில், பொதுநலனை மனதில்கொண்டு அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நடுநிலையாளராகப் பணியாற்ற தாங்கள் எப்போதும் தயார் எனவும் கூறும் ஆயர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப்பிரதிநிதிகள் அவை குறித்து தங்கள் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.