திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்திகள்
செப்.21,2013. 'உண்மையான பிறரன்பிற்கு மனவுறுதி தேவைப்படுகின்றது: தேவையிலிருப்போருக்கு
உதவுவதில் நம் கரங்கள் அழுக்காகுமே என்ற அச்சத்தை வெற்றிக்கொளவோம்' என இச்சனிக்கிழமையன்று
ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள். அதேநாளில், 'உலகப் பாதுகாப்பு என்பது அணுஆயுதங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது'
என பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள், அனைத்துலக அணுசக்தி அமைப்பில் பேசியதை, தன்
டுவிட்டர் பக்கத்தில் திருப்பீடச்செயலகமும் எழுதியுள்ளது.