நேர்காணல் – ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவரின் இலங்கைச் சுற்றுப்பயணம் – ஆயர் ஜோசப்
இராயப்பு
செப்.,19,2013. இலங்கையில் போர் முடிந்து நான்காண்டுகள் ஆகியுள்ளவேளை, அந்நாட்டில் மனித
உரிமைகள் பாதுகாக்கப்படுவது குறித்த உண்மை நிலையை அறிவதற்காக இம்மாதத்தில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டார் ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை. இவரை இப்பயணத்தின்போது
கொழும்புவில் சந்தித்துள்ளார் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு அவர்கள். இச்சுற்றுப்பயணம்
பற்றி அறிவதற்குத் தொலைபேசியில் மன்னார் ஆயரவர்களைத் தொடர்பு கொண்டோம்