2013-09-19 16:53:05

'Te Deum' நன்றிப்பாடலுடன் தங்கள் தேசிய நாளைக் கொண்டாடும் வெகு சில நாடுகளில் Chile நாடும் ஒன்று


செப்.19,2013. செப்டம்பர் 18 இப்புதனன்று, Chile நாடு, தன் 203ம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடியதையொட்டி அந்நாட்டின் ஆயர் பேரவை ஒரு புதிய வலைதளத்தைத் துவக்கியுள்ளது.
Chile நாட்டின் தலைநகர் Santiagoவில் அமைந்துள்ள பேராலயத்தில் இந்நாளையொட்டி பாடப்பட்ட 'Te Deum' என்ற நன்றிப்பாடலுடன் இவ்வலைத்தளம் துவக்கிவைக்கப்பட்டது.
உலகில், 'Te Deum' நன்றிப் பாடலுடன் தங்கள் தேசிய நாளைக் கொண்டாடும் வெகு சில நாடுகளில் Chile நாடும் ஒன்று. இவ்வாண்டு இந்த நன்றிப் பாடல் ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மேலும், இந்த தேசிய நாளையொட்டி, Concepcion உயர்மறைமாவட்டப் பேராயர் Fernando Chomali அவர்கள், அந்நகரில் அமைந்துள்ள El Manzano சிறைக் கைதிகளுக்குத் திருப்பலியாற்றி மறையுரை வழங்கினார்.
நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில், சிறையில் அடைபட்டிருப்பது வேதனையைத் தரும் ஓர் அனுபவம் என்று கூறிய பேராயர் Chomali அவர்கள், நாம் எத்தகையக் குற்றங்களைப் புரிந்திருந்தாலும், இயேசு எப்போதும் நம்முடன் வாழ்கிறார் என்பதை உணர்வது ஆறுதல் தரும் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.