செப்.17,2013. 'இன்றைய உலகில் உதவி தேவைப்படுவோர் பெருமளவில் உள்ளனர். நான் என்னுடைய
தேவைகள் குறித்தே அக்கறைக்கொண்டு சுயநலவாதியாக உள்ளேனா அல்லது, உதவி தேவைப்படுவோர் குறித்து
தெரிந்து வைத்துள்ளேனா?' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமை எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம்,
பிரெஞ்ச், இலத்தீன், அரேபியம், ஜெர்மானியம், போலந்து, போர்த்துக்கீசியம் ஆகிய ஒன்பது
மொழிகளில் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுவரும் திருத்தந்தை, ஏழைமக்களின்
தேவைகள் குறித்து ஒவ்வொருவரும் அக்கறையுடையவர்களாகச் செயல்படவேண்டும் என்பதை தன் டுவிட்டர்
பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.