செப்.16,2013. 'உலகப்பொருட்களில் மகிழ்ச்சியை நாடுவது, மகிழ்ச்சியின்றி இருப்பதற்கான
நிச்சயமான பாதை' என இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் டுவிட்டர் வழியாக, தன் கருத்துக்களைச் சுருக்கமாக
வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, உலகப்பொருட்களின்வழி முழு
மகிழ்ச்சியை நாடுவது, அதன் எதிர்மறை விளைவுகளையேக் கொணரும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். திருத்தந்தையின்
டுவிட்டர் செய்திகள் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், பிரெஞ்ச்,
இலத்தீன், அரேபியம், ஜெர்மானியம், போலந்து, போர்த்துக்கீசியம் ஆகிய ஒன்பது மொழிகளில்
வெளியாகி வருகின்றன.