புதியத் திருத்தந்தையால் பிரேசில் திருஅவையில் நல்ல மாற்றங்கள்
செப்.14,2013. விசுவாசத்தில் ஊறித்திளைக்கும் பிரேசில் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் வருகைக்குப்பின், மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தைக் காணமுடிகின்றது என்றார் வத்திக்கானிற்கான
பிரேசில் நாட்டின் புதிய தூதுவர் Denis Fontes de Souza Pinto. இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில்
திருத்தந்தையை சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தபின், பத்திரிகையாளர்களுக்குப்
பேட்டியளித்த புதியத் தூதுவர் de Souza Pinto, ஒவ்வொரு நாடும் தங்கள் தனித்தன்மையயுடன்,
அதேவேளை, ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் தேவையைத் திருத்தந்தை வலியுறுத்திவருவது
தன்னைக் கவர்ந்துள்ளது என்றார். இத்திருத்தந்தை குறித்து பிரேசில் மக்களிடையே மகிழ்ச்சி
நிலவுவதைக் காணமுடிகிறது என்றும், திருஅவை நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொள்ளும்
மக்களை, தற்போது கண்டுவருகிறோம் என்றும் மேலும் கூறினார் திருப்பீடத்திற்கான பிரேசிலின்
புதிய தூதுவர் de Souza Pinto.