2013-09-14 17:49:56

கடத்திச்செல்லப்பட்டோர் விடுவிக்கப்பட பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வேண்டுகோள்


செப்.14,2013. பிலிப்பீன்ஸ் அரசுடனான மோதலில் பொதுமக்களைப் பிணையக் கைதிகளாக எடுத்துச்சென்று தற்காப்பு ஆயுதங்களாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளின் செயல் குறித்து தங்கள் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
தீவிரவாதிகளால் பிலிப்பீன்சின் Zamboanga பகுதியில் கடத்திவைக்கப்பட்டுள்ள மக்கள், உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ள ஆயர்கள், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு தீவிரவாதிகளை விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த வியாழனன்று தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மக்களுள், அருள்பணி மைக்கேல் உஃபானா மட்டுமே இவ்வெள்ளியன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.