2013-09-14 17:56:21

எகிப்தில் கிறிஸ்தவக்கோவில், மசூதியாக மாற்றப்பட்டுள்ளது


செப்.14,2013. எகிப்தின் Monshaat Baddini எனுமிடத்திலுள்ள கிறிஸ்தவக்கோவிலை ஆக்ரமித்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அதனை இஸ்லாமியர்களின் தொழுகைக்கூடமாக மாற்றியுள்ளனர்.
'மறைசாட்சிகளின் தொழுகைக்கூடம்' என்ற பெயருடன் இஸ்லாமிய வழிபாட்டுத்தலமாக மாற்றப்பட்டுள்ள இக்கோவிலுனுள் கிறிஸ்தவர்கள் நுழைய அனுமதிக்கப்படாததுடன், காவல்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகின்றது.
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த Protestant கிறிஸ்தவசபை கோவிலைச் சுற்றி நிற்கும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், கிறிஸ்தவர்கள் எவரும் அக்கோவிலை நெருங்க அனுமதிப்பதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை 80 ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.