2013-09-13 16:08:14

பிலிப்பின்ஸ் நாட்டில் கடத்தப்பட்ட அருள் பணியாளர் Michael Ofana அவர்கள் விடுவிக்கப்பட்டார்


செப்.13,2013. பிலிப்பின்ஸ் நாட்டின் Mindanao தீவில் நான்கு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட அருள் பணியாளர் Michael Ofana அவர்கள் இவ்வெள்ளியன்று காலை விடுவிக்கப்பட்டார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
Mindanao தீவில், MNLF எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலால், நான்கு நாட்களுக்கு முன் அருள் பணியாளர் Ofana உட்பட 200 பேர் பிணையக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.
இவர்களின் விடுதலைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் 15,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து Zamboanga நகரில் இவ்வியாழனன்று செப வழிபாடும், அமைதிப் போராட்டமும் மேற்கொண்டனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடத்தப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளின் விடுதலையையொட்டி, MNLF குழுவுக்கும் அரசுக்கும் இடையே அருள் பணியாளர் Ofana ஒரு தூதராகச் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கணிக்கின்றன.

ஆதாரம் : Fides / MISNA








All the contents on this site are copyrighted ©.