பேராயர் பீட்டர் பால் பிரபு அவர்கள் இறையடி சேர்ந்தார்
செப்.11,2013. ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய பேராயர்
பீட்டர் பால் பிரபு அவர்கள் இச்செவ்வாய் இரவு, தன் 82வது வயதில் இறையடி சேர்ந்தார் என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 1931ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சென்னையில்
பிறந்த பிரபு அவர்கள், 1955ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, சென்னை மயிலை
உயர் மறைமாவட்டத்தில் பணியாற்றினார். இறையியலிலும், திருஅவை சட்டங்களிலும் பட்டங்கள்
பெற்ற இவர், 1962ம் ஆண்டு திருஅவையின் அரசுத் துறையில் தன் பணிகளைத் துவங்கினார். புலம்பெயர்ந்தோர்
மற்றும் பயணிகள் திருப்பீட அவையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இவர், 1993ம்
ஆண்டு ஜிம்பாப்வே நாட்டில் திருப்பீடத் தூதராகப் பொறுப்பேற்று, ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியபின்,
2002ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.