2013-09-10 16:27:23

நைஜீரியாவில் ஆங்கிலிக்கன் பேராயர் கடத்தப்பட்டுள்ளார்


செப்.10,2013. நைஜீரியாவின் தென்பகுதி நகரிலிருந்து ஆங்கிலிக்கன் பேராயர் ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
Port Harcourt என்ற நகரிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட பேராயர் Ignatius Kattey இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அவரின் மனைவி Beatrice Kattey கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணையத்தொகைக் கேட்டு மக்கள் கடத்தப்படுவது நைஜீரியாவில் வழக்கமேயெனினும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைப் பேராயரின் விடுதலைக்கென இதுவரை எவரும் பிணையத்தொகை கேட்டு அறிக்கை விடவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : AP








All the contents on this site are copyrighted ©.