செப்.10,2013. சிரியாவின் Maaloula என்ற கிராமத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், மூன்று
கிறிஸ்தவ இளையோரைக் கொலைசெய்ததுடன், 6 கிரேக்க கத்தோலிக்கர்களை கடத்திச்சென்றுள்ளனர்.
சிரியா நாட்டில், கிறிஸ்தவத்தின் தொட்டிலாகவும், இயேசு பேசிய அரமேய மொழி பேசும் மக்கள்
வாழும் ஒரே இடமாகவும் இருக்கும் Maaloula கிராமத்திற்குள் அண்மைக்காலங்களில் இஸ்லாம்
தீவிரவாதிகள் புகுந்து கிறிஸ்தவர்களைத் தாக்குவது இடம்பெற்று வருகிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின்
அச்சுறுத்தலுக்குப் பயந்து கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமைகளையும் குடியிருப்புகளையும் துறந்து
வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையே, Maaloula கிராம மக்கள் இஸ்லாம்
மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அவ்வாறு மாற மறுப்போர் தலை துண்டிக்கப்படுவர்
என அச்சுறுத்தப்படுவதாகவும், அப்பகுதியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.