2013-09-07 15:00:21

திருத்தந்தை பிரான்சிஸ் : அமைதிக்காகச் செபிப்போம்


செப்.,07,2013. அமைதிக்காகச் செபிப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis ‏@Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், உலகினர் அனைவரும் அமைதிக்காகச் செபிக்குமாறு தனது டுவிட்டர், செய்திகள் மற்றும் உரைகளில் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறார்.
மேலும், நன்மனம்கொண்ட எல்லா ஆண்களும் பெண்களும் அமைதியை ஏற்படுத்துவதற்கான கடமையைக் கொண்டிருக்கின்றனர் என இவ்வெள்ளி மாலையில் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.