2013-09-05 17:24:22

கிறிஸ்தவத்தை மறுதலிக்க லாவோசில் 11 குடும்பங்களுக்கு மிரட்டல்


செப்.,05,2013. லாவோசின் Nongdaeng கிராமத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாறிய 11 குடும்பங்களும் கிறிஸ்தவத்தைக் கைவிடவேண்டும் அல்லது கிராமத்தை விட்டு வெளியேறவேண்டும் என அப்பகுதி அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர்.
இயற்கையை வழிபடுபவர்களாக இருந்த ஏறத்தாழ 50 பேரைக்கொண்ட இந்த 11 குடும்பத்தினரும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். மேற்கத்திய நாடுகளின் மதமான கிறிஸ்தவம், லாவோஸ் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை முன்வைத்து, அம்மதத்தைக் கைவிடுமாறு மிரட்டியுள்ள அப்பகுதி அதிகாரிகள், இல்லையேல் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு அக்குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.