2013-09-04 16:41:15

இலங்கை, படுகொலைகளின் பூமி - நவநீதம்பிள்ளை


செப்.04,2013. ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைக்கான அண்மைச் சுற்றுப்பயணம், இலங்கை, படுகொலைகளின் பூமி என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இலங்கை அரசின் அழைப்பின் பேரில், அந்நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை ஆராய்வதற்காக இப்பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த நவநீதம்பிள்ளை, யாரையும் விமர்சிக்க இங்கு தான் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று போரில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும், மற்றும் பிற மக்களையும் சந்தித்துப் பேசியுள்ள நவநீதம்பிள்ளை, இம்மக்களுக்கு ஒரு தீர்வைத் தேடி தருவேன் என்ற நம்பிக்கையையும் அளித்துள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நவநீதம்பிள்ளை வன்னிப் பகுதிகளில் இருந்து திருகோணமலை சென்றதுமே முகாம்களுக்குள்ளே இருந்த இராணுவம் பழையபடியே வந்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Tamilwin







All the contents on this site are copyrighted ©.