2013-09-02 16:21:54

வரதட்சணை கொடுமை, மணிக்கு ஒரு பெண் பலி


செப்.,02,2013. இந்தியாவில் வரதட்சணை கொடுமையால் மணிக்கு ஒரு பெண் பலியாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம்(என்.சி.பி.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை வரதட்சணைக் கொடுமைகளால் பெண்களின் இறப்பு அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
இதில் 2007ம் ஆண்டு 8,093, 2008ம் ஆண்டு 8,172, 2009ம் ஆண்டு 8,383, 2010ம் ஆண்டு 8,391, 2011ம் ஆண்டு 8,618 பேர், என நாடு முழுவதும் சராசரியாக மணிக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை தொடர்பான வன்முறைக் குற்றங்களால் பலியாகின்றனர் என்றும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.