2013-08-31 15:33:26

திருப்பீடச் செயலகம் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகிகளின் பதவிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன


ஆக.,31,2013. திருப்பீடச் செயலகம் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகிகளின் பதவிகளை இச்சனிக்கிழமையன்று உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு திருத்தந்தையின் தலைமைப் பணிக்காலம் முடியும்போது திருப்பீடத்தில் அத்திருத்தந்தை நியமனம் செய்த தலைவர்களின் பதவி புதிய திருத்தந்தையால் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதன்படி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமைப்பணியின்போது செயலாற்றிய சிலரின் பதவிகளை இச்சனிக்கிழமையன்று உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்தின் பொது விவகாரத்துறைச் செயலர் பேராயர் Giovanni Angelo Becciu; திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Dominique Mamberti; பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் Georg Gänswein; திருப்பீடத்தின் பொது விவகாரத் துறை ஆலோசகர் பேரருள்திரு Peter Wells; திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகியோரின் பதவிகளை உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.